மொழிவழி மாநிலங்களுக்கு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.
1956 நவம்பர் 1 அன்று மொழிவழி மாநிலங்கள் அடிப்படையில் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. இந்த நாளை ‘தமிழ் வளர்ச்சி நாளாக’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடு கிறது. இதனையொட்டி மத்தியசென்னை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
மொழிவழி அமைந்த மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசால் ஆபத்து ஏற்பட்டுள் ளது. மொழிவழி மாநிலம் அமைய கம்யூனிஸ்ட்டு கள் போராடியபோது, பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கம் அதை எதிர்த்தது. நாட்டைத் துண்டாட கம்யூனிஸ்ட்டுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியது. மொழிவழி மாநிலங்களை கலைத்து மாநிலங்களற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்றது. தேசிய மொழிகளை அங்கீகரிக்காத, மொழி அடிப்படையில் மாநிலம் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் அடிப்படைக் கொள்கை. அத்தகைய பாஜகவின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மாநிலம் உருவான நாளை அரசு கொண்டாட வேண்டும் என்று ஏமாற்றுகிறார்.
அரசமைப்புச் சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது. இந்த மொழிகளை சமமாக நடத்த வேண்டிய ஒன்றிய பாஜக அரசு, 21 மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கியதை விட, சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிகமாக 643 கோடி ரூபாயை ஒதுக்கி யுள்ளது. தமிழில் உள்ளது போன்று ஒரே ஒரு நாளிதழ் சமஸ்கிருதத்தில் உள்ளதா? உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான, 3500 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிக குறைவாக நிதி ஒதுக்குகிறது.
பல்வேறு மொழி, இனம் கொண்ட பூமாலை போன்ற தேசத்தில், மாநில உரிமை களை, அடையாளங்களை பாஜக பறிக்கிறது. ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறது.
பாஜக கொள்கைக்கு எதிராக மொழிவழி மாநிலம் அமைந்த நாளை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாடுகிறது. கேரளா உள்ளிட்ட பிற மாநில அரசுகளை போன்று தமிழக அரசும் மாநிலம் உருவான நாளைக் கொண்டாட வேண்டும்.
நூற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்கள்; அவரவர் தாய்மொழியில் பேசியவர்கள் கம்யூனிஸ்ட்டு கள். தாய்மொழியில் பேசும் பாரம்பரியத்தை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் தாய்மொழியில்தான் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு அனைத்து நிலைகளிலும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உரு வாக்க வேண்டும். கூடுதல் மொழிகளை கற்பதற்கே அடிப்படை தாய் மொழிதான். பாஜக அரசு தாய்மொழி வழிக்கல்வியை மறுத்து, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
ஆளுநரின் அரசியல்
தமிழ்நாடு ஆளுநர் அரை சர்வாதிகாரி போல, மாநில உரிமைகளை மதிக்காமல் செயல்படுகிறார். மாநில அரசின் 20 மசோதாக் களுக்கு ஒப்புதல் தராமல் உள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி மறுக்கிறார். 25 வருடங்களைக் கடந்த 49 சிறை கைதி களை விடுதலை செய்ய ஒப்புதல் தர மறுக் கிறார். எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநி லங்களில் பாஜக ஆளுநர்கள் வாயிலாக போட்டி ஆட்சி நடத்த முயற்சிக்கிறது. சிறு விஷயத்தை கூட அரசுக்கு எதிராக ஆளுநர் தூண்டி விடு கிறார். பாஜக தலைவரைவிட, அரசை எதிர்த்து ஆளுநர் அதிகம் அரசியல் செய்கிறார்.
தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக சென்றால் 29 பைசாதான் திரும்ப வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்திலிருந்து 1 ரூபாய் சென்றால் 2.73 ரூபாய் அம்மாநிலத்திற்கு திருப்பி தரு கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநி லங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்க, பாஜகவை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. முருகேஷ், பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதி யழகன், சென்னை மாமன்ற உறுப்பினர் ஏ.பிரிய தர்ஷினி, பகுதிக்குழு உறுப்பினர் ஏ.எல்.மனோகர், சி.மார்டின் உள்ளிட்டோர் பேசினர்.
அ.சவுந்தரராசன்
தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் பல்லாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி யின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், “பல தேசிய இனங்களை கொண்டது இந்தியா. ஒரு இனத்தின் அடிப்படையே மொழி. ஒரு மதமாக இருந்தாலும் ஒரு இனத்தின் மீது மற்றொரு மொழியை திணித்தால் நாடு சித றும். பாகிஸ்தான், வங்காளி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியை திணித்த தால்தான் வங்கதேசம் உருவானது.
தேசிய இனங்களின் பூங்காவாக உள்ள இந்தியாவில், ஒரேநாடு ஒரே மொழி என்று ஒன்றியஅரசு மொழித் திணிப்பில் ஈடுபட்டால், நாடு சிறைச்சாலையாக மாறும். தேசிய இனங் களின் மொழி, உரிமைகள் மதிக்கப்பட்டால்தான் நாடு ஒற்றுமையாக இருக்கும். மொழித் திணிப் பிற்கு எதிராக, மாநில உரிமைகளை பாது காக்க தமிழகம் மட்டுமல்ல; கர்நாடகம் உள்ளிட்ட மாநில மக்கள் போராடுகின்றனர். ஒன்றிய பாஜக அரசு அகற்றப்பட்டால்தான் தேசிய இனங்கள் சுயமரியாதையோடு வாழ முடியும்” என்றார்.
பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், ஜி.விஜயலட்சுமி எம்.சி., மூத்த தலைவர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பி.ஜீவா, பகுதிச் செயலாளர்கள் த.கிருஷ்ணா (தாம்பரம்), ந.வெங்கடேசன் (ஆலந்தூர்) உள்ளிட்டோர் பேசினர். ழ ிவழி மாநிலங்களுக்கு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.